ஞாயிறு, 9 ஜனவரி, 2011

என்று தணியும் இந்த அடிமைகள் மோகம்..

மற்றும் ஒரு அடிமைகள் ஏலத்தை இந்தியா ஆர்வத்தோடும், ஆதங்கத்தோடும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதில் உள்நாட்டு அடிமைகள் நல்ல விலைக்கு வாங்கப்பட்டதாக ஊடகங்கள் கூவிக்கொண்டிருகின்றன.. அதிலயும் வயசான அடிமைகளை வாங்க யாரும் முன்வராத இந்தியாவின் தலையாய பிரச்சினையை எல்லோரும் பேசிக் கொண்டிருந்ததை காண முடிந்தது.


இந்த அடிமைகளை (சும்மக்கச்சுக்கும்) மோதவிட்டு இந்தியர்களை மேலும் கூத்தாடிகளும், வியாபாரிகளும் கல்லா கட்ட தயாராகிவிட்டார்கள் நண்பர்களே...




நாடெங்கும், வீடு தோறும், வீதி தோறும் இந்த பேச்சு பெருக்கெடுக்கும்...

சுற்றம் மறந்து..... சுயம் இழந்து.... உண்ண மறந்து....... உறக்கம் இழந்து.... வெறிகொள்ள போகும் தோழர்களே சிந்தியுங்கள்...