சனி, 26 டிசம்பர், 2009

மலர் மெலிது மயிலிறகு மெலிது என்பர்
தத்தம் மழலை தொடல் உணராதவர்...

வளைகுடா தமிழனின் குரல்!!!!!

கருவறையில் விட்டு வந்தேன்
கண் திறவா சிறு மலரை!!!
காணும் வகை தெரியவில்லை
கண்மணியை இன்றுவரை!!!
கணிப்பொறியில் தான் கண்டேன் !
கனிமொழியின் சிறுமுகத்தை!!!! என்
கண்ணிமையே உன்னை காண
காலம் இன்னும் கனியவில்லை!!!





அறிமுக செடியில்
புன்னகை நீருற்றி
அன்பு உரமிட்டு
பாசமாய் பாதுகாக்க - அது
காதலாய் மலர்ந்தென்ன!!!!