சனி, 23 ஜனவரி, 2010

பாத்திரம் நிறைய பாலில் ஒரு துளி நஞ்சாய் - என் மனதில்
அந்த காதல் நுழைந்தது !!!
உள்ளே சென்ற ஒரு துளி
உடன் பெருகியது பலமடங்காய் - என்
உறக்கத்தை கெடுத்தது!!!
உணர்வை பறித்தது!!!
உணவை மறித்தது
மன வைத்தியங்கள் செய்து பார்த்தேன்
மசியவில்லை அந்நஞ்சு!!
நட்பு வைத்தியர்கள் சொன்ன
கைவைத்தியமும் பலனில்லை!!!
முடிவில் நஞ்சை நஞ்சால் முறிக்க
முடிவு செய்தேன்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக